வாகனங்களில் ‘G’ அல்லது ‘அ’ ஸ்டிக்கரா? சோதனை உறுதி – காவல்துறை அதிரடி!
தமிழகத்தில் உள்ள வாகனங்களில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிக்கர்கள் குறித்த உண்மை தன்மை சார்ந்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
வாகன சோதனை:
தமிழகத்தில் சமீப காலமாக ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்ட வாகனங்கள் அதிகமாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இதிலும் குறிப்பாக சொல்லப்போனால் போலீஸ், வக்கீல், பத்திரிகை போன்ற ஸ்டிக்கர் ஓட்டப்பட்ட வாகனங்கள் அதிகரித்து விட்டன. இது மட்டுமல்லாமல், இதோடு சேர்த்து Government அல்லது அரசாங்கம் என்ற விரிவாக்கத்தை சுருக்கெழுத்தாக கொண்ட “G அல்லது அ” என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்களும் உள்ளன.
ஆகஸ்ட் 31 வரை தான் கெடு, மீறினால் விளைவு மோசமாக இருக்கும் – அமெரிக்காவிற்கு தாலிபான்கள் எச்சரிக்கை!
இந்த அடையாளம் போடப்பட்ட வாகனங்களில் முக்கிய அரசு பணி சார்ந்த அதிகாரிகள் பயணிப்பார்கள் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த வாகனங்கள் காவல்துறையின் சோதனை வளையங்களில் உட்படுவது இல்லை. இது தவிர போலீஸ், வக்கீல், பத்திரிகை போன்ற அடையாளங்கள் ஒட்டப்பட்ட வாகனங்களை சேர்ந்தவர்கள் பெரும்பாலும், சோதனைக்கு ஒத்துழைப்பதில்லை. மேலும் காவல்துறையினர் அவர்களை கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த நிலையில், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு சில நபர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது அதை தடுக்க ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் சோதனைக்கு உட்படுத்திய பின்னரே அனுப்ப வேண்டும் என்றும், இந்த அடையாளங்கள் காணப்பட்ட வாகனங்களின் முழு விவரங்களையும் அதாவது பெயர், முகவரி, கைபேசி எண், மாவட்டம், வாகன ஆப் சார்ந்த தகவல்கள் என அனைத்தையும் சேமித்து அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக காவல் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.