தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை இல்லை – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விளக்கம்!!
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமுள்ள தளர்வுகள் இல்லாமல் ஊரடங்கு அமலில் உள்ள 11 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட கூடாது எனவும், பள்ளிகளில் நேரடி வகுப்புகள் தற்போது திறக்க வாய்ப்பில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பள்ளிகள் தற்போது வரை திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் இன்று (ஜூன் 14) முதல் புதிய கல்வி ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனால் தலைமை ஆசிரியர்களும், அலுவலக பணியாளர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா 2 ஆம் அலை கட்டுப்பாடுகளும், தளர்வுகளும் – ஓரு விரிவான பார்வைக்கு!
மேலும் இன்று முதல் 6ம் வகுப்பு 11ம் வகுப்பு மாணவர் சேர்க்கை தொடங்கியுள்ளது. 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 9 ஆம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கான இலவச பாடப்புத்தகங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 11 ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கை 27 மாவட்டங்களில் தொடங்கியுள்ளது. ஆனால் கொரோனா பரவல் அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் தற்போது மாணவர் சேர்க்கை இல்லை என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் பேசிய அவர், கடந்த ஆண்டு 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் மதிப்பெண் இருக்காது. மாணவர்கள் ஆல் பாஸ் என்று மட்டுமே இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் புத்தகங்கள் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். தற்போது உள்ள சூழ்நிலையில் பள்ளிகள் திறக்க வாய்ப்பில்லை என அவர் தெரிவித்துள்ளார்.