கேந்த்ரா வித்யாலயாவில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021!
NLC நெய்வேலி மூலமாக கேந்த்ரா வித்யாலயா கல்வி குழுமத்தில் இருந்து புதிய பணியிட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆசிரியர் பணிகளுக்கு என காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு தகுதியான பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பமும் திறமையும் உள்ளவர்கள் இறுதி தேதிக்கு முன்னரே விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | NLC – KV |
பணியின் பெயர் | PRT, TGT, PGT, Coaches in Games & Sports, Art & Craft |
பணியிடங்கள் | Various |
நேர்காணல் தேதி | 20.10.2021 & 21.10.2021 |
கேந்த்ரா வித்யாலயா வேலைவாய்ப்பு 2021 :
கேந்த்ரா வித்யாலயா கல்வி குழுமத்தில் PRT, TGT, PGT, Coaches in Games & Sports, Art & Craft ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Join Our TNPSC Coaching Center
கேந்த்ரா வித்யாலயா கல்வித்தகுதி :
- PRT – 12ம் வகுப்பு/ JBT/ D.Ted/ B.El.Ed அல்லது அதற்கு இணையான தேர்ச்சி அல்லது CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- TGT – பணிக்கான பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Computer Applications தெரிந்திருக்க வேண்டும்.
- PGT – பணிக்கான பாடப்பிரிவில் Post Graduate M.Sc Course அல்லது Master Degree/ M.Sc (Computer Science)/ MCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் Computer Applications தெரிந்திருக்க வேண்டும்.
- Coaches in Games & Sports – BPEd/ MPEd/ Diploma/ Degree/ Graduation உடன் Knowledge of Computer/ ICT பெற்றிருக்க வேண்டும்.
- Art & Craft – Graduation தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கேந்த்ரா வித்யாலயா ஊதிய விவரம் :
பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.21,250/- முதல் அதிகபட்சம் ரூ.27,500/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.
NLC தேர்வு செயல்முறை:
பதிவு செய்வோர் அனைவரும் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 20.10.2021 மற்றும் 21.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது .
விண்ணப்பிக்கும் முறை :
திறமை கொண்டவர்கள் வரும் 20.10.2021 மற்றும் 21.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.