டிச.12ம் தேதி புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு பாடப்புத்தகம் – முதல்வர் அறிவிப்பு!
தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பள்ளி உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் உறுதி அளித்துள்ளார்.
நோட்டு புத்தகங்கள்:
தமிழகத்தில் கடந்த வாரம் முழுவதும் மிக்ஜாம் புயல் காரணமாக வட மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக ஏரிகளில் நீரின் கொள்ளளவு நிரைந்து அதிகளவு உபரி நீர் அனைத்தும் வெளியேற்றப்பட்டது. தொடர் கனமழை மற்றும் நீர் நிலைகளில் இருந்து திறந்து விடப்பட்ட நீரின் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்தது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள மக்களின் உடைமைகள் நீரில் மூழ்கி பெரும் சிக்கலில் தவிர்த்து வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வசதி ஏற்பாடு – அமைச்சர் அறிவிப்பு!!
பள்ளி மாணவர்களின் நலன் கருதி நடைபெறவிருந்த அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 13 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தால் தங்களது பாடப்புத்தகம் மற்றும் நோட்டு புத்தகம் போன்ற உடைமைகளை இழந்த மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் புதிய பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார. பள்ளி மாணவர்களின் நலன் கருதி அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பெருகி உள்ளது.