NIT திருச்சியில் மத்திய அரசு வேலை – சம்பளம்: ரூ.31,000/-
Junior Research Fellow பணியிடங்களை நிரப்ப திருச்சியில் செயல்படும் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (NIT) இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
NIT திருச்சி வேலைவாய்ப்பு விவரங்கள்:
NIT அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென ஒரே ஒரு பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech/ ME/ M.Tech/ MS in Computer Science & Engineering/ Information Technology என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- முதல் ரூ.35,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் அதிகாரப்பூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து [email protected] என்னும் மின் அஞ்சல் முகவரிக்கு 04.08.2022ம் தேதிக்குள் அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.08.2022 ம் தேதிக்கு பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகவரி:
Office of the Project Investigator,
Dr. Kunwar Singh (Computer Science and Engineering),
National Institute of Technology,
Tiruchirappalli-15, Tamil Nadu.