ஜூன் 30 வரை இரவு, வார இறுதி முழு ஊரடங்கு நீட்டிப்பு – மாநில அரசு அறிவிப்பு!
கொரோனா நோய்த்தொற்று பரவல் நிலவரத்தை கருத்தில் கொண்டு பஞ்சாப் மாநில அரசு ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை சில தளர்வுகள் உடன் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. மேலும் இரவு மற்றும் வார இறுதி முழு ஊரடங்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு நீட்டிப்பு:
கொரோனா வைரஸ் பாதிப்பு நிலைமையை ஆய்வு செய்த பின்னர், பஞ்சாப் மாநில அரசு மாநிலத்தின் முழு ஊரடங்கை சில தளர்வுகள் உடன் ஜூன் 30 வரை நீட்டித்து உள்ளது. புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ள மாநில அரசு, ஐ.இ.எல்.டி.எஸ் பயிற்சி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் குறைந்தது ஒரு தடுப்பூசி டோஸ் செலுத்தி இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் மீண்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து? ஜூன் 28 ல் முதல்வர் ஆலோசனை!
பஞ்சாபில் கடந்த 24 மணிநேரத்தில் 341 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தின் தொற்று எண்ணிக்கை 5,94,279 ஆக அதிகரித்து உள்ளது. மறுபுறம், மேலும் 12 இறப்புகள் பதிவு செய்யப்பட்டு உள்ளதால், மொத்த பலி எண்ணிக்கையை 15,956 ஆக உயர்ந்துள்ளது. தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 4,832 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தின் கொரோனா நேர்மறை விகிதம் 0.7 சதவீதமாக உள்ளது. ஜூன் 30 வரை அமலில் இருக்கும் ஊரடங்கில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் அமலில் இருக்கும்.
- பார்கள், விடுதிகள் திறக்க அனுமதி இல்லை.
- அனைத்து கல்வி நிறுவனங்களும் தொடர்ந்து மூடப்படும்.
- 50க்கும் மேற்பட்டவர்கள் திருமணம், இறுதிச்சடங்கு போன்ற நிகழ்வுகளில் கலந்து கொள்ள அனுமதி இல்லை.
TN Job “FB Group” Join Now
- தினசரி இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரை தொடர்ந்து அமலில் இருக்கும்.
- வார இறுதி ஊரடங்கு உத்தரவு ஞாயிற்றுக்கிழமை தொடரும்.