இரவு ஊரடங்கு ரத்து – ஆகஸ்ட் 23 வரை தளர்வுகளுடன் பொதுமுடக்கம் நீட்டிப்பு!
ஹரியானாவில் இரவு ஊரடங்கு கட்டுப்பாடுகளை ரத்து செய்த மாநில அரசு, ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்துள்ளது. இதற்கு மத்தியில் சில கூடுதல் செயல்பாடுகளுக்கு தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரங்கு நீட்டிப்பு
மாநிலம் முழுவதும் கொரோனா புதிய பாதிப்புகளின் நிலையை ஆய்வு செய்த பின்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டிப்பதாக ஹரியானா மாநில அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ள பொது முடக்கத்தில் கூடுதல் தளர்வுகளையும் அளிக்க அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக தலைமைச் செயலாளர் விஜய வர்தன் பிறப்பித்த புதிய உத்தரவின்படி, ‘ஹரியானா மாநிலம் முழுவதும் அமலில் இருக்கும் இரவு ஊரடங்கு உத்தரவு நீக்கப்படுகிறது. இருப்பினும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடரும்’
அண்ணா பல்கலை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – மாணவர்கள் கவனத்திற்கு!
‘தொடர்ந்து நீச்சல் குளங்கள் அனைத்தும் மீண்டுமாக திறக்கப்படுகிறது. அதே நேரத்தில் மால்கள், கடைகள் மற்றும் சந்தைகளுக்கான நேர வரம்புகளை அரசு நீக்கியுள்ளது. எனினும் இதுவரை வழங்கப்பட்ட தளர்வுகளும் நடைமுறையில் இருக்கும். பொது இடங்களில் முகக்கவசங்களை அணிவது கட்டாயம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடைகள் மற்றும் மால்களின் நிர்வாகங்கள் கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் எனவும் வாடிக்கையாளர்கள் விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தவிர தொழில்முறை விளையாட்டு வீரர்களுக்காக தேவையான பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீச்சல் குளங்களை மீண்டும் திறக்க அரசாங்கம் அனுமதித்தது. மேலும் உணவகங்கள், பார்கள், ஜிம்கள் மற்றும் ஸ்பாக்களுக்கான தடைசெய்யப்பட்ட நேரங்களை நீக்கியுள்ள அரசாங்கம் இவை தொடர்ந்து 50% திறனில் செயல்பட அனுமதித்துள்ளது. குறிப்பாக ஒரே சமயத்தில் 50 நபர்களுடன் மத வழிபாட்டு ஸ்தலங்களை திறக்க அனுமதி கொடுத்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த உத்தரவுடன் முன்பு நடைமுறையில் இருந்ததைப் போல, அனைத்து பெருநிறுவன அலுவலகங்களும் முழு வருகையுடன் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்ற நிகழ்வுகளில் 100 நபர்களுக்கும், வெளிப்புற நிகழ்வுகளில் 200 நபர்களுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே அடுத்த கட்ட அறிவிப்பிற்கு முன்னதாக கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பதற்கான திட்டத்தை தயாரிக்குமாறு பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.