நாளை முதல் ஆகஸ்ட் 31 வரை இரவு ஊரடங்கு தளர்வுகள் – திரிபுரா அரசு உத்தரவு!
கடந்த 10 நாட்களில் திரிபுரா மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு நாளை முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு தளர்த்துவதாக அறிவித்துள்ளது.
ஊரடங்கு தளர்வுகள்:
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2ம் அலை பரவல் கடந்த சில வாரங்களாக குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்து வரும் இடங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகிறது. தொடர்ந்து பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், திரிபுரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் மாநில அரசு ஆய்வு நடத்தி புதிய உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது.
மின்சார இரு சக்கர வாகன ஊக்கத்தொகை ரூ.15 ஆயிரமாக அதிகரிப்பு – மத்திய அரசு!
அதன்படி, ஆகஸ்ட் 12 முதல் ஆகஸ்ட் 31 வரை இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும். மக்கள் அதிக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டது தான் பாதிப்பு குறைவுக்கு காரணம் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் ஆகஸ்ட் 31 வரை அதிகபட்சம் 100 பேர் வரை கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் அனுமதிக்கப்படுகிறது. மூடிய அரங்குகளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் 30% நபர்கள் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. ஒருவருக்கொருவர் 2 அடி தூரம் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
TN Job “FB Group” Join Now
புதிய உத்தரவின்படி தியேட்டர்கள், மல்டிப்ளெக்ஸ், உடற்பயிற்சி கூடங்கள், நீச்சல் குளங்கள், விளையாட்டு வளாகங்கள், மைதானங்கள், பொழுதுபோக்கு பூங்காக்கள் மற்றும் பார்கள் 30% நபர்களுடன் அனுமதிக்கப்படுகிறது. மேலும் கடைகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள், உணவகங்கள் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். அனைத்து அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களும் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்படலாம். அனைவரும் அனைத்து கொரோனா தடுப்பு விதிகளையும் பின்பற்ற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.