மாநிலத்தில் மீண்டும் இரவு ஊரடங்கு அமல்? அரசு விளக்கம்!
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுநோய் நிலைமை கட்டுக்குள் இருப்பதால் அங்கு விதிக்கப்பட்டிருந்த இரவு ஊரடங்கு மற்றும் இதர ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளது என்று டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வெள்ளிக்கிழமை நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்துள்ளது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீக்கம்:
கடந்த கொரோனா தொற்று நோயின் 2 வது அலைக்கு பிறகு மீண்டும் நவம்பரில் தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மாறுபாடான ஓமைக்ரான் வகை வைரஸ் தொற்று அதிக அளவில் பரவும் தன்மையுடன் நாட்டில் பாதிப்பை ஏற்படுத்த தொடங்கியது. இதனால் டெல்லி அரசு ஜனவரி முதல் தலைநகரில் இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் பல கட்டுப்பாடுகளை மீண்டும் கொண்டு வந்தது. சமீபத்தில் கொரோனா பாதிப்புகள் குறைய தொடங்கிய பிறகு டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கார்களில் தனியாக ஓட்டுபவர்கள் இனி கட்டாயமாக முகக்கவசம் அணியத் தேவையில்லை என்று முடிவு செய்யப்பட்டது.
TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு ஹாப்பி நியூஸ் – அரசு அறிவிப்பு!
டெல்லியில் வியாழக்கிழமை நிலவரப்படி 556 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுகள் உறுதி செய்யப்பட்டது. 6 பேர் நோய் தொற்று பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது மற்றும் டெல்லியில் ஓமிக்ரான் பரவல் உச்சத்தில் இருந்தபோது சில வாரங்களுக்கு வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டது. மக்கள் மிகவும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்படுவதால் கொரோனா நிலைமை சீரமைய தொடங்கியதும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு 18 மாத DA நிலுவைத்தொகை உயர்வு? முழு விவரம் இதோ!
இதற்காக நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இரவு ஊரடங்கு இருக்காது என்றும், கோவிட் தொற்றுநோய் பரவுவதைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட மற்ற அனைத்து கட்டுப்பாடுகளும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி முதல் பள்ளிகள் நேரடியாக நடத்தப்படும். முகக்கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ₹500 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அனைவரும் கொரோனா நோய் தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் கடைபிடிக்க மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.