தீவிரமாய் பரவும் நிஃபா வைரஸ் காய்ச்சல் – அமைச்சர் முக்கிய எச்சரிக்கை!
கேரளா மாநிலத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழகத்திலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
நிஃபா வைரஸ் காய்ச்சல்:
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருவதால் ஏகப்பட்ட வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அந்த வகையில், கேரளா மாநிலத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவுகிறது. இந்நிலையில், தமிழகத்திலும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுவிட கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போதைக்கு தமிழகத்தில் நிஃபா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். இருப்பினும், கேரளா மாநிலத்தை ஒட்டிய 6 தமிழக மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கேரளத்தில் இருந்து தமிழகம் வரும் பொதுமக்களை தீவிர ஆய்வு மேற்கொள்ளப்பட்ட பிறகே மாநிலத்திற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
இருப்பினும், பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் பொதுமக்களுக்கு அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.