NIEPMD தேசிய நிறுவனத்தில் தேர்வில்லாத வேலை – ரூ.46,000 ஊதியம்..!
NIEPMD தேசிய நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Associate Professor, Sr. Lecturer & Jr. Lecturer பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கியுள்ளது. இப்பணி குறித்த அனைத்து தகவல்களும் இப்பதிவில் எளிமையாக வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | National Institute for Empowerment Of Persons With Multiple Disabilities (NIEPMD) |
பணியின் பெயர் | Associate Professor, Sr. Lecturer & Jr. Lecturer |
பணியிடங்கள் | 07 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.04.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Walk In |
NIEPMD காலிப்பணியிடங்கள்:
வெளியாகிய வேலைவாய்ப்பு அறிவிப்பின் படி, NIEPMD நிறுவனம் கீழுள்ளவாறு மொத்தமாக 07 காலிப்பணியிடங்களை ஒதுக்கியுள்ளது.
Associate Professor – 01
Sr. Lecturer – 04
Jr. Lecturer – 02
NIEPMD தகுதி விவரங்கள்:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் தொடர்புடைய பாடப்பிரிவில் Masters degree கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் 50% மேல் மதிப்பெண் பெற்றிருப்பது அவசியமாகும்.
சிறந்த coaching centre – Join Now
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் தேவையான அனுபவம் வைத்திருக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களை அறிவிப்பில் காணலாம்.
NIEPMD ஊதிய விவரம்:
- Associate Professor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.46,000/- பெறுவார்கள்.
- Sr. Lecturer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.39,600/- பெறுவார்கள்.
- Jr. Lecturer பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் மாதம் ரூ.36,000/- பெறுவார்கள்.
NIEPMD தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.
ExamsDaily Mobile App Download
NIEPMD விண்ணப்பிக்கும் முறை:
இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை சரியாக பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள முகவரிக்கு 27.04.2022 அன்று காலை 11 மணிக்குள் சென்று நேரடியாக நேர்முகத் தேர்வில் கலந்து கொண்டு பயனடையலாம்.