அரசு ஊழியர்களுக்கு புத்தாண்டு பரிசு – ஜாக்பாட் தகவல்!
மத்திய அரசின் ஊழியர்களுக்கு புத்தாண்டு பண்டிகையை ஒட்டி புது பரிசு ஒன்று கிடைக்க உள்ளது. இது தொடர்பான தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு பரிசு:
மத்திய அரசின் ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் வீட்டு வாடகை படியும் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு குறிப்பிட்ட சதவீதத்தை எட்டும் போது மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை கொடுப்பனவும் உயர்த்தப்படும். வீட்டு வாடகை படியானது அரசு ஊழியர்கள் தங்கி இருக்கும் நகரத்தை பொறுத்து X, Y மற்றும் Z என்று மூன்று வகைகளில் 27 சதவீதம் 18 சதவீதம் மற்றும் ஒன்பது சதவீதமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வானது 50 சதவீதத்தை எட்டும் போது இவை மேலும் உயர்த்தப்படும்.
SBI CLERK பணிக்கு விண்ணப்பித்து விட்டீர்களா ? – தயாராக தொடங்குங்க தேர்வர்களே!
அதாவது 50 சதவீதமாக அதிகரித்தால் வீட்டு வாடகை படி முப்பது சதவீதமாகவும், Y பிரிவு ஊழியர்களுக்கு 18 சதவீதத்திலிருந்து இருபது சதவீதமாகவும், Z பிரிவு ஊழியர்களுக்கு 9% லிருந்து 10 சதவீதமாகவும் உயர்த்தப்படும். இதற்கான அறிவிப்புகள் 2024 ஆம் ஆண்டு புத்தாண்டு பண்டிகை ஒட்டி வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.