இந்தியாவில் மக்கள் அதிகமாக ஆன்லைன் மூலம் பணம் செலுத்த தொடங்கிவிட்டனர். அவர்களுக்காக புதிய வசதி விரைவில் அமலுக்கு வர இருக்கிறது.
புதிய வசதி
மக்கள் பலர் தற்போது ஆன்லைன் மூலமாக அதிகமாக பண பரிவர்த்தனை செய்கின்றனர். வெறும் மொபைல் இருந்தாலே போதும் எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம். மேலும் சிறிய பூ கடை முதல் பெரிய மால் வரை யூபிஐ பார்கோடுகள் இருக்கின்றன. ஆனால் யூபிஐ பரிவர்த்தனை முறையில் ஒரு சில பிரச்சனையும் வருகிறது. அதாவது மொபைல் வாலட்டில் உள்ள பணத்தை அந்த நிறுவனத்தின் ஆப் மூலம் மட்டுமே பயன்படுத்த முடியும். அதாவது கூகுள் பேயில் இருந்து அதே யூசருக்கு மட்டுமே பணம் செலுத்த முடியும்.
இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.15,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!
அந்த ஆப் இல்லை என்றால் அனுப்ப முடியாது. இந்த பிரச்சனையை போக்க ரிசர்வ் வங்கி புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது உங்கள் மொபைல் வாலட்டை மூன்றாம் தரப்பு UPI பயன்பாட்டுடன் (PhonePe, Paytm போன்றவை) இணைக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து இருக்கிறது. இந்த வசதி விரைவில் அமலுக்கு வர இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.