Post Office சேமிப்பு திட்டம் – தினசரி ரூ.50 சேமித்தால் 35 லட்சம் ரிட்டன்ஸ்! முழு விபரம் இதோ!
அஞ்சல்துறையின் கிராம சுரக்ஷா யோஜனா திட்டம் மூலம் அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த சேமிப்பு திட்டம் வருவாயை பெருகும் ஒரு சிறந்த திட்டமாக உள்ளது. இது குறித்த முழு விபரங்களை இப்பதிவில் காணலாம்.
சேமிப்பு திட்டம்:
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் வங்கிகளுக்கு இணையாக அஞ்சலக சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். வங்கியை விட சிறந்த லாபத்தை அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் கொடுக்கிறது. அஞ்சலகங்களும் வாடிக்கையாளர்களுக்கு புதிய பயன் தரக்கூடிய சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி மக்களை சேமிக்க தூண்டுகிறது. அந்த வகையில் தற்போது கிராம சுரக்ஷா யோஜனா என்கிற புதிய சேமிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் சேமிப்பின் அங்கமாக இருந்து வருவாயை பெருக்கும் திட்டமாக இது இருக்கும்.
IND vs NZ T20 தொடர் 2021 – நியூஸிலாந்து அணி அறிவிப்பு, கேன் வில்லியம்சன் விலகல்!
அதேபோல் கடைசி வரை உங்கள் பணத்திற்கு பாதுகாப்பும் கிடைக்கும். 19 வயது முதல் 55 வயது வரை உள்ள யார் வேண்டுமானாலும் இத்திட்டத்தில் சேரலாம். இந்த திட்டத்தில் சேருவதன் மூலம் 35 லட்சம் வரை திரும்ப பெற முடியும். கிராம சுரக்ஷா யோஜனா திட்டத்தில் மாதம் பிரிமியம் தொகையாக 1,515 ரூபாய் செலுத்த வேண்டும். பிரீமியம் தொகையை உங்கள் வசதிக்கேற்ப காலாண்டு, அரையாண்டு அல்லது வருடாந்திர முறையில் கூட நீங்கள் செலுத்தலாம். இதற்காக தினமும் நீங்கள் 50 ரூபாய் சேமித்தாலே போதுமானது. நீங்கள் 55 ஆண்டுகள் கட்டலாம்.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் மீண்டும் அதிகரிப்பு? 7வது ஊதியக்குழு பரிந்துரை!
பாலிசிதாரருக்கு மெச்சூரிட்டி பலனாக ரூ.34.60 லட்சமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் தேர்ந்தெடுத்த காலத்திற்குள் உங்களால் பணம் செலுத்த முடியவில்லை என்றால் நிலுவை தொகையை பின்னர் செலுத்தலாம். இத்திட்டத்தின் காலம் முடிவதற்குள் இடையில் உங்களுக்கு பணம் தேவைப்பட்டால் கூட எடுக்கலாம். இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்து உங்களுக்கு 80 வயது ஆகும் போது உங்களின் சேமிப்புக்கான மொத்த தொகை மற்றும் போனஸ் உங்களின் அதிகாரப்பூர்வ வாரிசு அல்லது நீங்கள் நாமினி செய்த நபர்களுக்கு வழங்கப்படும்.