தமிழக ரேஷன் கடை விற்பனையார்களுக்கான முக்கிய அறிவுறுத்தல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுடன் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
ரேஷன் கடை
தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு மலிவான விலையில் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் கொரோனா போன்ற பேரிடர் காலங்களில் அரிசி, கோதுமை உள்ளிட்டவை இலவசமாகவும் வழங்கப்பட்டது. மேலும் தற்போது பருப்பு, எண்ணெய் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகள் தொடர்பாக நாள்தோறும் புதுப்புது அறிவிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்போது “நம்ம பகுதி, நம்ம ரேஷன் கடை” என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரையோர மக்களுக்கான எச்சரிக்கை – கனமழை எதிரொலி!
இதையடுத்து ரேஷன் கடைகளில் 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யும் ஊழியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பொது விநியோக திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக 282 ரேஷன் கடை விற்பனையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் ஒன்றை மாவட்ட ஆட்சியர் நடத்தினார். இதில் இவர் தெரிவித்துள்ளதாவது, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகளிலும் விற்பனையாளர்களை தங்களது கடைகளை சுத்தமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள வேண்டும்.
அத்துடன் விற்பனையாளர்கள் பொதுமக்களிடம் பொறுப்புடனும், இணக்கமாகவும், கனிவுடனும் பேசிப்பழக இருக்க வேண்டும். இதையடுத்து கடையின் தகவல் பலகையில் விற்பனையாளர்களின் பெயர், தொலைபேசி எண், பொருட்களின் இருப்பு விவரம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கட்டாயமாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இதனை தொடர்ந்து பொது விநியோக திட்ட சேவையில் பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்ற ரேஷன் கடை விற்பனையாளர்களை வட்டத்திற்கு 3 பேர் வீதம் 12 விற்பனையாளர்களை தேர்வு செய்து விற்பனையாளர்களின் செயல்பாடுகளை பாராட்டி பரிசுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்