தமிழகத்தில் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் அமல் – மீறினால் 500 ரூபாய் அபராதம்! எச்சரிக்கை அறிவிப்பு!
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றுநோயை தடுக்கும் விதமாக பொது இடங்களில் முகக்கவசம் அணிந்து வராதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
முகக்கவசம் கட்டாயம்
தமிழகத்தில் கடந்த ஒரு சில வாரமாக கொரோனா வைரஸ் பாதிப்புகள் வேகமெடுக்கத் துவங்கி இருக்கிறது. அந்த வகையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கோயமுத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக சென்னையில் மட்டும் தினசரி 400க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று பதிவாகிறது. இந்த சூழ்நிலைகளை கவனத்தில் கொண்டு பொது மக்கள் அனைவரும் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
Exams Daily Mobile App Download
குறிப்பாக, தமிழகத்தில் மீண்டுமாக முகக்கவசம் கட்டாயம் என்ற அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. இது போன்ற அடிப்படையான கட்டுப்பாடுகளை பின்பற்றுவதன் மூலம் கொரோனா பரவுவதை எளிதாக கட்டுப்படுத்தலாம் என்று அரசாங்கம் கருதுகிறது. இந்த சூழலில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் பாதிப்புகள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இப்போது அதிகரித்து வரும் நோய்த்தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக அம்மாவட்ட ஆட்சியர் அனில் சேகர் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
திருப்பதி கோவில் செல்ல தரிசன கட்டண சேவை டிக்கெட் – தேவஸ்தானம் வெளியீடு!
அந்த வகையில் பொது இடங்களுக்கு வரும் மக்கள் அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் முகக்கவசம் அணிந்து வாராமல் இருப்பவர்களுக்கு ரூ.500 அபராதமாக வசூலிக்கப்பட இருக்கிறது. இந்த அறிவிப்பானது இன்று (ஜூன் 28) முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இப்போது, பொது மக்கள் சரியாக முகக்கவசங்களை அணிந்து வருகிறார்களா என்பதை கண்காணிக்க அம்மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட சிறப்பு குழுக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.