இன்று முதல் வார இறுதி ஊரடங்கு உத்தரவு – புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு!
கொரோனா 2 ம் அலை பரவலை தடுக்க வார இறுதி முழு ஊரடங்கை அமல்படுத்துவதாக திரிபுரா மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும் இக் கட்டுப்பாடுகள் இன்று (ஜூலை 10) முதல் நடைமுறைக்கு வர உள்ளது.
ஊரடங்கு அமல்:
திரிபுரா மாநிலத்தில் கொரோனா 2 ம் அலை தொற்று குறைந்து வரும் சூழலில் மாநிலம் முழுவதும் விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து கடந்த வாரங்களில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு உத்தரவை தொடர மாநில அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அந்த வகையில் இன்று (ஜூலை 10) சனிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை, வார இறுதி ஊரடங்கு உத்தரவு நடைமுறைக்கு வருகிறது.
இன்று மற்றும் நாளையும் முழு ஊரடங்கு – கேரளா அரசு அறிவிப்பு!
முன்னதாக மத்திய சுகாதார அமைச்சகம் அளித்துள்ள தகவலின் படி, திரிபுராவில் நேற்று (ஜூலை 9) 4175 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 6 இறப்புகள் பதிவாகி உள்ளதாகவும் கூறுகிறது. இதை தொடர்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு குறித்து வருவாய் துறை செயலாளர் தனுஸ்ரீ தேப் பார்மா, ‘திரிபுராவில் சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் திங்கள் கிழமை 6 மணி வரை பல்வேறு கட்டுப்பாடுகளுடன் வார இறுதி ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும்’ என தெரிவித்துள்ளார்.
TN Job “FB Group” Join Now
தவிர கொரோனா தடுப்பு நடவடிக்கைகளாக ஜூலை 2ம் தேதி அன்று, கொரோனா பாதிப்பு அதிகமுள்ள கேரளா, அருணாச்சல பிரதேசம், திரிபுரா, ஒடிசா, சத்தீஸ்கர், மணிப்பூர் உள்ளிட்ட 6 மாநிலங்களை மத்திய அரசு குழு ஆய்வு செய்தது. திரிபுராவில் ஆய்வு செய்த பின்னர் மாநிலம் முழுவதும் பல ஒழுங்கு நடவடிக்கைகளை விரைந்து நடைமுறைப்படுத்த மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் (MoHFW) வலியுறுத்தியுள்ளது.