இன்று மற்றும் நாளையும் முழு ஊரடங்கு – கேரளா அரசு அறிவிப்பு!
கொரோனா பாதிப்பின் எதிரொலியாக தற்போது கேரள மாநிலத்தில் இன்று மற்றும் நாளை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கு:
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா பரவி வருகின்றது. இதன் காரணமாக மத்திய அரசு முழு ஊரடங்கு உத்தரவினை அறிவித்தது. பின், மக்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு தளர்வுகள் அளிக்கப்பட்டது. இப்படியாக இருக்க, கொரோனா 2ம் அலையின் போது மாநில அரசுகள் தங்களது மாநிலத்தில் ஏற்படும் கொரோனா பாதிப்பின் அடிப்படையில் கொரோனா ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்தது.
தமிழ்நாடு அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – புதிய அரசாணை வெளியீடு!!
இந்தியாவில் உள்ள சட்டிஸ்கர், கேரளா, மகாராஷ்டிரா, பஞ்சாப் மற்றும் மத்திய பிரதேஷ் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகின்றது. இதனால் அந்த மாநில அரசுகள் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கினை அமல்படுத்தி உள்ளது. அந்த வகையில் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பரவலின் எதிரொலியாக இன்று மற்றும் நாளை இரு நாட்களும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
புதிய கட்டுப்பாடுகள்
- இந்த இரு தினங்களிலும் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படும்.
- மதுக்கடைகள், வங்கிகள், வணிக மற்றும் நிதி நிறுவனங்கள் ஆகியவை செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
- பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய வெளியே அனுமதிக்கப்படுவர்.
- மக்கள் அனைவரும் வெளியே செல்ல போதுமான ஆவணங்களை கையில் வைத்திருத்தல் அவசியம்.
- பொதுமக்கள் வெளியே செல்லும் போது கொரோனா கால தடுப்பு நடவடிக்கைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.