தமிழக அரசு கல்வித்துறையின் கருத்தாளர்களை நியமிப்பது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
புதிய மாற்றம்:
தமிழக அரசின் கல்வித் துறையில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகளை உறுதி செய்யும் வகையில் கருத்தாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அந்த வகையில் விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் முதல்வர் விருதுநகர் முதன்மை கல்வி அலுவலருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதில் மாவட்ட அளவில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அனுப்புவது தொடர்பாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு 10000 டன் வெங்காயம் ஏற்றுமதி – அரசு அனுமதி!
அதன்படி மாநில/மாவட்ட அல்லது ஒன்றிய அளவில் கருத்தாளர்களாக மிக சிறப்பாக செயல்பட்ட தொடக்க கல்வி, உயர்தொடக்க கல்வி, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்பு ஆசிரியர்களை பாடவாரியாக நான்கு பேர் வீதம் தேர்வு செய்து இணைப்பில் உள்ள google லிங்கில் ஏப்ரல் மூன்றாம் தேதி மாலை 4:00 மணிக்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் 50 வயதுக்கு கீழ் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றும், ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கு போதிய ஆர்வமும் ஊக்கமும் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.