மிழகத்தில் புதிய ரேஷன் கார்டு குறித்தான முக்கிய அறிவிப்பு – தகவல் வெளியீடு!
தமிழகத்தில் பொதுமக்களுக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 23 மாதங்களில் மட்டுமே 4 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
ரேஷன் கார்டு:
தமிழகத்தில் ஒட்டன்சத்திரம் கேதையுறும்பு, புளியமரத்துகோட்டை, புலியூர் நத்தம், ஜோகிபட்டி, வலையபட்டி மற்றும் இடையகோட்டை ஊராட்சிகளில் நடைபெற்று கொண்டிருக்கும் திட்டப்பணிகளுக்கான அடிக்கல்நாட்டுவிழா நடைபெற்றது. அப்போது, அந்த விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் சக்கரபாணி புதிய ரேஷன் கார்டு குறித்தான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழ்நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கடந்த 23 மாதங்களில் மட்டுமே 14 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். மேலும், ஒட்டன்சத்திரத்தில் தற்போது கட்டப்பட்டு வரும் குளிர் பதன கிடங்கு பணிகள் இன்னும் சில நாட்களில் முடிவடைந்துவிடும் எனவும், காளாஞ்சிபட்டியில் ரூ.10 கோடி செலவில் போட்டி தேர்வு பயிற்சி மையம் அமைக்கப்பட இருப்பதாகவும், கூடிய விரைவில் கேதையுறும்பில் துணை மின் நிலையம் அமைக்கப்படும் எனவும், ஒட்டன்சத்திரம் தொகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும், தொகுதிக்கு ஒரு பனை மரம் நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.