தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!

0
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு - அமைச்சர் தகவல்!
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டு பெற விண்ணப்பித்தோர் கவனத்திற்கு – அமைச்சர் தகவல்!

தமிழகத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளை விட கூடுதல் கடைகள் உருவாக்கப்படும் எனவும், புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு 15 நாட்களுக்குள் ரேஷன் அட்டைகள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தகவல் தெரிவித்துள்ளார்.

புதிய ரேஷன் கடைகள்:

அரசுத் துறைகளில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழக அரசு ரேஷன் கடைகளிலும் சில மாறுதல்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் பொருட்கள் அனைத்தும், அனைவருக்கும் உரிய நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய, இனி வரும் நாட்களில் மாதத்தின் அனைத்து நாட்களும் ரேஷன் கடைகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் கூடுதல் ரேஷன் கடைகள் அமைக்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி உறுதி தெரிவித்துள்ளார்.

ஆகஸ்ட் 28 வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிப்பு – ஆஸ்திரேலியா அரசு அறிவிப்பு!

அதாவது செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அலுவலர்களுடன், உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். இதற்கு பின்னாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தை பொருத்தளவு 2.05 கோடிக்கும் அதிகமான ரேஷன் அட்டை பயனர்கள் இருக்கும் நிலையில், 35,233க்கும் அதிகமான ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இதில் 8,000 ஆயிரம் ரேஷன் கடைகள் வாடகை கட்டடத்தில் உள்ளன. இந்த வாடகைக்கு மட்டும் ரூ.18 கோடி செலவு செய்யப்படுகிறது. இவற்றில் சில கடைகளில் மட்டும் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.

TN Job “FB  Group” Join Now

இவர்கள் அனைவருக்குமான ரேஷன் பொருட்களை ஒரே நேரத்தில் விற்பனை செய்வதில் சில சிக்கல்கள் ஏற்படுகிறது. மேலும் தமிழகம் முழுவதும் பகுதி நேர ரேஷன் கடைகளை துவங்க வேண்டும் என கோரிக்கைகள் பெறப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, 1000 ரேஷன் அட்டைதாரர்களுக்கு மேல் பயனடைந்து வரும் கடைகள் பிரித்து அமைக்கப்பட்டு, புதிய கடைகள் உருவாக்கப்படும். மேலும் புதிய ரேஷன் அட்டைக்காக விண்ணப்பம் செய்துள்ள அனைவருக்கும் 15 நாட்களுக்குள் புதிய அட்டைகள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என தெரிவித்துள்ளார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!