சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக புதிய திட்டம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
புதிய திட்டம்
பொதுவாக விமானத்தில் செல்வோருக்கு பெரிய தலைவலியாக இருப்பது உடமைகளை பரிசோதனை செய்ய எடுத்து கொள்ளும் நேரம் தான். இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் இருந்து புறப்படும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகளுக்கு, பாஸ்ட் டிராக் எனப்படும் self package drop (SBD) என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் மூலம் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான பயணிகள், தங்களுடைய உடமைகளை தானியங்கி இயந்திரங்கள் மூலம் ஸ்கேன் செய்து கன்வேயர் பெல்ட் மூலம் விமானத்திற்கு அனுப்பி வைக்கலாம்.
மேலும் இதற்காக விமான நிலையத்தில் றப்பாடு பகுதி டெர்மினல் ஒன்றில் பாதுகாப்பு சோதனை கவுன்டர்கள் 60 முதல் 63 வரையில் தானியங்கி சிறப்பு கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஊழியர்கள் இருக்கமாட்டார்கள். பயணிகள் உடமைகளை வைத்துவிட்டு, தங்களின் பயண டிக்கெட், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்ய வேண்டும். பின் தானியங்கி முறையில் அவர்களுக்கு போர்டிங் பாஸ் வரும்.பயணிகள் அந்த போர்டிங் பாஸை எடுத்து, அங்குள்ள மற்றொரு இயந்திரத்தில் ஸ்கேன் செய்ய வேண்டும். பின் இயந்திரத்தில் உள்ள பட்டன்களை கிளிக் செய்தால், உடமைகளில் ஒட்டுவதற்கான டேக்குகள் வரும். அதை ஒட்டிய பின் உடமைகள் விமானத்தில் ஏற்றுவதற்கு தானாகவே கொண்டு செல்லப்படும்.