தமிழக அரசு பணியாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழக அரசுத் துறையில் தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வருபவர்களுக்கு புதிய ஓய்வூதியத்திட்டம் பொருந்தாது என்று அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. இது குறித்த கூடுதல் விவரங்களை இப்பதிவில் காணலாம்.
ஓய்வூதியத் திட்டம்
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசுத் துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், ஓய்வு பெற்ற பின் அவர்களுக்கு மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட அளவு தொகை ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு இந்த ஓய்வூதியத்தை வழங்குவதற்காக தமிழக அரசு ஒரு ஊதியமுறையை பின்பற்றி வந்தது. இந்த பழைய ஓய்வூதியத்திட்டத்தை மாற்றி, அப்போதிருந்த அதிமுக தலைமையிலான அரசு புதிய ஓய்வூதியத் திட்டத்தை கடந்த 2009ம் ஆண்டில் அமல்படுத்தியது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு இல்லை – ரேஷன் கடை பணியாளர்கள் அதிர்ச்சி!
இந்த புதிய ஓய்வூதிய திட்டம் தான் இன்று வரையும் அரசு ஊழியர்களுக்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது இந்த புதிய ஓய்வூதிய திட்டம் அரசு ஊழியர்களுக்கு போதிய அளவு பலனளிக்காததால், மீண்டும் பழைய ஓய்வூதியத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என கடந்த 17 ஆண்டுகளாக அரசு ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களும் மேற்கொள்ளப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது – புதிய வழிகாட்டுதல்கள் அறிவிப்பு!
இதற்கிடையில் தமிழகத்தில் கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலின் போது அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. இந்நிலையில் புதிய ஓய்வூதியத்திட்டம் தொடர்பாக அரசு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டிருக்கிறது. அந்த வகையில் புதிய ஓய்வூதியத்திட்டம் தற்காலிக பணியாளர்களுக்கு பொருந்தாது என்றும் அவர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத்திட்ட (CPS) தொகையை திரும்ப ஒப்படைத்தல் சார்ந்து அறிவுரைகள் வழங்கி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.