தமிழகத்தில் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் முக்கிய அறிவிப்பு – புதிய உறுப்பினரை சேர்ப்பது எப்படி?
இந்திய குடிமகனின் முக்கிய ஆவணமாக உள்ள ரேஷன் அட்டையில் புதியதாக திருமணம் ஆனவர்கள் மற்றும் குழந்தைகளின் பெயரையும் சேர்க்க வேண்டும். எனவே புதிய உறுப்பினர் பெயரை ரேஷன் அட்டையில் எப்படி சேர்ப்பது என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
எளிய வழிமுறைகள்:
இந்தியாவில் ஆதார் மற்றும் பான் அட்டையை போலவே மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்று ரேஷன் கார்டு. இதன் மூலம் மக்கள் மலிவு விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகின்றனர். மேலும் அரசால் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் ரேஷன் கடை மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதிலும் தற்போது மத்திய அரசு செயல்படுத்தியுள்ள ஒரே நாடு ஒரே அட்டை முறை வந்த பிறகு, இது இன்னும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் கவனத்திற்கு – இனி தமிழில் தான் Initial! அரசாணை வெளியீடு!
ஏனெனில் இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பிய கடைகளில் பொருட்களை வாங்கி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரேஷன் அட்டையை அப்டேட் சேர்த்து வைத்திருப்பது மிக அவசியம் ஆகும். புதிய குடும்ப உறுப்பினர் பெயரை ரேஷன் அட்டையில் சேர்ப்பது மிக அவசியமாகும். அந்த வகையில் திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் குடும்பத்திற்கு புதிதாக வந்தால் அவரது பெயரை ரேஷன் கார்டில் கட்டாயம் சேர்க்க வேண்டும்.
1. குடும்பத்திற்கு திருமணத்திற்குப் பிறகு ஒரு உறுப்பினர் வந்தால், முதலில் அவரது ஆதார் அட்டையை புதுப்பிக்கவும். பின்பு பெண் உறுப்பினர் ஆதார் அட்டையில் கணவரின் பெயர் இருக்க வேண்டும்.
2. இதனை தொடர்ந்து வீட்டில் இருந்த படியே புதிய உறுப்பினர்கள் பெயர்களை ரேஷன் கார்டில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
3.இந்த வகையில் ஆன்லைனில் விண்ணப்பம் செய்ய உங்கள் மாநிலத்தின் உணவு வழங்கல் துறையின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்லவும். உங்கள் மாநிலத்தில் ஆன்லைனில் உறுப்பினர்களின் பெயர்களை சேர்க்கும் வசதி இருந்தால், வீட்டில் இருந்தபடியே ரேஷன் கார்டில் புதிய பெயர்களை சேர்க்கலாம்.
4. ரேஷன் அட்டையில் குழந்தைகளின் பெயரை சேர்க்க வேண்டுமெனில், குழந்தைகளின் பிறப்பு சான்று மட்டும் இருந்தால் போதுமானதாக இருந்தது. ஆனால் தற்போது ஆதார் கார்டு தேவை. குழந்தைகளுக்கும் ஆதார் கார்டினை பெற்றுக் கொண்டு ரேஷன் கார்டில் அவர்கள் பெயரை சேர்க்கலாம்.