தமிழக மக்களை தேடி வரும் புதிய மருத்துவ திட்டம் – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது. அதில் ஒன்று தான் மக்களை தேடி மருத்துவம் திட்டம். இந்த திட்டத்தின் மூலம் இதுவரை 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் கொடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டம்:
தமிழகத்தில் முதல்வராக முக ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை அமல்படுத்தி வருகிறார். அவருடைய நலத்திட்டங்கள் அனைத்துமே, மக்கள் அனைவருக்கும் சமமான முறையில் கிடைக்கும் வகையில் உள்ளது. இந்த வரிசையில் இந்தியாவிலேயே முதன்முறையாக மக்களது வீடுகளுக்கே நேரடியாக சென்று மருத்துவம் பார்க்கும் “மக்களை தேடி மருத்துவம்” திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் மூலமாக நோயால் அவதிப்பட்ட மக்களுக்கு வீடு தேடி சென்று மருந்து பெட்டகங்கள் வழங்கப்படும்.
Exams Daily Mobile App Download
சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள், அரசு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுவதோடு மாதந்தோறும் மருந்து மாத்திரை பெற நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் வயதானவர்கள் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் சிரமத்தில் இருக்கின்றனர். அவர்களுக்கு சுலபமான முறையில் மருந்துகள் கிடைக்க இந்த திட்டம் பயனுள்ளதாக இருக்கிறது.
TCS நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை ரெடி – உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க..!
இந்நிலையில் இந்த திட்டம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில், தமிழ்நாட்டில் தொலைதூர மலை கிராமங்களுக்கும் மருத்துவ சேவை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகப்பேறு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணி பெண்களுக்கு யோகா பயிற்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. யோகா பயிற்சி மூலமாக கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலமாக தமிழகத்தில் 75 லட்சம் பேருக்கு மருத்துவ பெட்டகங்கள் வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.