45 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – உ.பி அரசின் புதிய திட்டம்.. முதல்வர் உறுதி!

0
45 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு - உ.பி அரசின் புதிய திட்டம்.. முதல்வர் உறுதி!
45 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு - உ.பி அரசின் புதிய திட்டம்.. முதல்வர் உறுதி!
45 லட்சம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு – உ.பி அரசின் புதிய திட்டம்.. முதல்வர் உறுதி!

உத்திரபிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் கீழ் சுமார் 45 லட்சம் பெண்களுக்கு வேலை அளிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.

வேலைவாய்ப்பு:

உத்திரபிரதேச மாநிலத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் அம்மாநிலத்தில் 2023 – 2024 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில் கடந்த ஆண்டுகளை விட கூடுதல் நிதியை அரசு ஒதுக்கீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஒருவர் உயிரிழப்பு..மீண்டும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் கெடுபிடி – அமைச்சர் கோரிக்கை!

மேலும் பட்ஜெட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் திட்டம் இடம் பெற்றிருந்ததது. அதாவது அரசு பள்ளிகளை மேம்படுத்த ரூ.1000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல 700 பள்ளிகள் அடுத்த கட்டத்தை நோக்கில் செல்ல தரம் உயர்த்தப்படவுள்ளது.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

கல்வியை தொடர்ந்து நடப்பு ஆண்டு கிராம புறங்களில் உள்ள சுமார் 45 லட்சம் ஏழை குடும்ப பெண்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் புதிதாக 2.83 லட்சம் மகளிர் சுய உதவி குழுக்கள் உருவாக்கப்படும். இதில் 31.13 லட்சம் பெண்கள் இணைக்கப்படுவார்கள் இதன் வாயிலாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!