ஆகஸ்ட் 27ம் தேதிக்கு பின்னர் புதிய படங்கள் ரிலீஸ் – சங்கத் தலைவர் அறிவிப்பு!
ஈரோடு மாவட்டத்தில் வரும் 27ம் தேதிக்கு பிறகு புதுப்படங்கள் தியேட்டரில் வெளியிடப்படும் என மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளார்.
புதுப்படம் வெளியீடு இல்லை:
தமிழகத்தில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் மாநில அரசு எடுத்த தீவிரமான தடுப்பு நடவடிக்கைகளாலும், விதிக்கப்பட்ட தளர்வுகளில்லா கட்டுப்பாடுகளாலும் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன் அறிவிக்கப்பட்ட கூடுதல் ஊரடங்கு தளர்வுகளில் தியேட்டர்கள் திறப்பு இடம்பெற்றது.
வெறும் 87 ரூபாய்க்கு வீடுகள் விற்பனை – ‘இந்த’ நாட்டு மக்களுக்கு ஜாக்பாட்!
இதில் 50% இருக்கைகளுடன் மாநிலத்தில் தியேட்டர்களை திறந்து கொள்ளலாம் என்று முதல்வர் அறிவித்தார். இதற்கான முறையான வழிகாட்டு நெறிமுறைகளையும் தம் செய்திக் குறிப்பில் வெளியிட்டார். இதில் நோய்தடுப்பு குறித்த நிலையான தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, குறிப்பிட்ட இடைவெளியில் அரங்கத்தை கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்ய வேண்டும். உள்ளே வரும் நபர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதோடு சேர்த்து திரையரங்க பணியாளர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
ஈரோடு மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்நாதன் கூறியுள்ளதாவது, மாவட்டத்தில் தற்போதைக்கு புதுப்படங்கள் எதுவும் வெளியிடப்போவது இல்லை. நேற்று திறக்கப்பட்ட தியேட்டர்களிலும் பழைய படங்கள் மட்டுமே திரையிடப்பட்டதாகவும், இந்த நிலை வரும் 27-ம் தேதி வரை தொடரும். அதன் பிறகு புதுப்படங்கள் தியேட்டரில் திரையிடப்படும் என தெரிவித்துள்ளார்.அதோடு சேர்த்து முகக்கவசம் அணிந்து வராத பொதுமக்களுக்கு முகக்கவசம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.