விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை – ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. இந்த சீரியலில் அண்ணன் தம்பிகள் அவர்களின் மனைவிகளை தவிர்த்து புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ:
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒரு நல்ல குடும்ப சீரியலாக இருப்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதனால் TRPயில் தொடர்ந்து முதல் மூன்று இடங்களில் இருக்கிறது. இந்த சீரியலில் பல முக்கிய கதாபாத்திரங்கள் இருக்கின்றனர். கதாநாயகன் கதாநாயகி என சொல்ல முடியாத அளவிற்கு இந்த சீரியல் கதாபாத்திரங்கள் அனைத்துமே முக்கியமாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த சீரியலில் சென்ற வாரம் முழுவதும் புது கடை திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு ஹாப்பி நியூஸ் – பிளாஸ்டிக் அட்டையை ஆர்டர் செய்வது எப்படி!
அதில் சொந்தங்கள் வாழ்த்து சொல்ல, கயலும் பாண்டியனும் அவர்களது குட்டி கையால் கடையை திறந்து வைத்தார்கள். அடுத்ததாக இந்த வாரம் ஐஸ்வர்யாவை மையமாக வைத்தே கதை எடுத்து செல்லப்படுகிறது. ஐஸ்வர்யா காலேஜ் போகமாட்டேன் என சொல்ல, தனத்திற்கும் மூர்த்திக்கும் அதில் விருப்பம் இல்லை, இருந்தாலும் ஐஸ்வர்யாவை வற்புறுத்த முடியாமல் எதுவும் சொல்லாமல் இருக்கின்றனர். இந்நிலையில் இடையே முல்லை கதிர் பற்றியும் காட்டப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் பதவி உயர்வு – ஜாக்பாட் அறிவிப்பு!
கதிர் மெடிக்கல் ரிப்போர்ட்களை மறைத்து வைப்பதால் முல்லைக்கு சந்தேகம் வந்துள்ளது. அதனால் ஏதாவது பிரச்சனை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது சீரியலில் யாரும் எதிர்பாராத திருப்பமாக புது நடிகை ஒருவர் என்ட்ரி கொடுக்க இருக்கிறார். அவர் சரவணன் மீனாட்சி புகழ் ரட்சிதா, இந்த சீரியலில் வக்கீல் போல என்ட்ரி கொடுக்க இருப்பதாக ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ஆனால் அது எடிட் செய்யப்பட்ட ப்ரோமோ என்பதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர்.