மத்திய அரசின் புதிய மின் கட்டண உயர்வு – வலுக்கும் எதிர்ப்புகள்!
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த புதிய மின் கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் அதிக எதிர்ப்புகள் கிளம்ப்பி உள்ளது. இதனை அரசு உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மின் கட்டண உயர்வு:
மத்திய அரசு புதிய மின்கடண உயர்வு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வர உள்ளதாக சமீபத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு வெளியிட்டிருந்தது. அந்த அறிவிப்பின்படி நுகர்வோர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணமானது பயன்படுத்தப்படும் நேரத்தை பொறுத்து கணக்கிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதாவது பீக் நேரங்களான காலை மற்றும் மாலை 6 மணி முதல் 10 மணி வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கான கட்டணம் வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும் என்றும், மற்ற நேரங்களில் பயன்படுத்தப்படும் கட்டணம் சாதாரண அளவில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
SSC CHSL & Bank தேர்வர்கள் கவனத்திற்கு – வெற்றி உங்கள் கையில்!
இந்த அறிவிப்பு குறித்து தமிழகத்தில் பலத்த எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. பல முக்கிய அரசியல் தலைவர்களும் இது குறித்த தங்கள் கண்டனத்தை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது அறிவித்துள்ள புதிய மின் கட்டண உயர்வை மீண்டும் திரும்ப பெற வேண்டும். இந்த கட்டண உயர்வு ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்படுகிறது.