எச்சரிக்கை மக்களே.. உருவானது ‘மாண்டஸ்’ புயல் – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

0
எச்சரிக்கை மக்களே.. உருவானது 'மாண்டஸ்' புயல் - 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!
எச்சரிக்கை மக்களே.. உருவானது 'மாண்டஸ்' புயல் - 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!
எச்சரிக்கை மக்களே.. உருவானது ‘மாண்டஸ்’ புயல் – 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக புதுவையில் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புயல்:

கடந்த வாரம் வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. இந்த புயலுக்கு மாண்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தின் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

அதனை தொடர்ந்து புதுவையில் புயல் சின்னம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் மீட்பு குழுவினர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்த புயலால் கன மழையுடன் காற்று 85 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் புதுச்சேரியில் பேனர்கள், பிளக்ஸ்கள், கட் அவுட் ஆகியவை வைக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தை புரட்டி எடுக்கும் மாண்டஸ் புயல்.. 3 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”!

Exams Daily Mobile App Download

தற்போது உள்ள பேனர்களை உடனடியாக அகற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையான உணவு பொருட்களை மக்கள் இப்போதே வாங்கி வைத்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டள்ளது. இந்த மாண்டாஸ் புயல் நாளை புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!