தமிழகத்தை புரட்டி எடுக்கும் மாண்டஸ் புயல்.. 3 மாவட்டங்களுக்கு “ரெட் அலர்ட்”!
வங்க கடலில் உருவான “மாண்டஸ்” புயல் நாளை (டிச. 9) இரவு கரையை கடக்கும் நிலையில், அதனால் பல மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.
ரெட் அலர்ட்
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் இன்னும் குறையாமல் இருக்கிறது. மேலும் பருவமழையால் கடந்த மாதம் முதல் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக மாறி இருக்கிறது. இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயல் புதுச்சேரி, ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை இரவு அல்லது டிசம்பர் 10ம் தேதி காலை கரையை கடக்க இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது,
Follow our Instagram for more Latest Updates
அதனால் தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இன்று (டிச. 8) டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது. மேலும் டிசம்பர் 9 ஆம் தேதி சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 மாவட்டங்களில் இன்று (டிச.8) பள்ளி & கல்லூரிகளுக்கு விடுமுறை – மண்டாஸ் புயல் எதிரொலி!
Exams Daily Mobile App Download
அதே போல நாளை (டிச 9) செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகமான கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் அந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் அண்டை மாநிலமான ஆந்திராவுக்கும் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் புதுச்சேரியிலும் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ரெட் அலர்ட் அறிவிப்பை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.