வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம்!
இந்தியாவின் வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்தியாவில் அதிகரித்து வரும் புவி வெப்பமயமாதல் காரணமாக பனியாறுகள், பனிப்பாறைகள் உருகி கடலின் நீர் மட்டம் உயருகிறது. இதனால் புயல்கள் உருவாகிறது. கடல் நீரின் அளவு, கடலின் அமைவிடம், புயல்கள் உருவாக காரணங்கள் என வானிலை நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த 4 ஆண்டுகளாகவே இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் புயல்கள் உருவாகிறது. சமீபத்தில் டவ்தே மற்றும் யாஸ் புயல்கள் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரண நிதி? அமைச்சர் விளக்கம்!
இது தமிழகம், கேரளா மற்றும் வட மாநிலங்களில் அதிக மழைப்பொழிவை உருவாக்கியது. இதனை தொடர்ந்து வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கிந்திய பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய பகுதிகளில் கன மழையை ஏற்படுத்தும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி செல்லும். மேலும் ஒடிசா, சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மராட்டிய மாநிலத்தின் விதர்பா பகுதியில், அதி கனமழை பெய்யக்கூடும். ஆந்திர தெற்கு கடற்கரையிலும், ராயலசீமாவில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதனால் அடுத்த நான்கு நாட்களுக்கு கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.