தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புகளுக்கு நிவாரண நிதி? அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் உள்ளது. தற்போது இதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
நிவாரண நிதி:
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பால் 350 க்கு மேற்பட்டவர்கள் தங்களது உயிரை இழந்து வருகின்றனர். இதனால் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா உயிரிழப்புக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று தொடர்ந்து தகவல் வெளிவந்த வண்ணம் இருந்து வருகிறது. தற்போது இதற்கு தமிழக மக்கள் நல்வாழ்வு துறை மற்றும் மருத்துவ துறை அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் விளக்கமளித்துள்ளார்.
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் கணக்கீடு – அரசுக்கு எதிர்ப்பு!
சென்னை அரும்பாக்கம் அரசினர் அறிஞர் மருத்துவமனை வளாகத்தில் சித்த மருத்துவத்திற்கான ஒருங்கிணைந்த கட்டளை மையத்தை திறந்து வைத்த அமைச்சர் சுப்பிரமணியன் அவர்கள் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா பலிகளுக்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது புரளி. மேலும் இதை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பரப்புகின்றனர் என்றும் குற்றம் சாட்டினார். எனவே இதை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார்.
TN Job “FB Group” Join Now
மேலும் தமிழகத்தில் தற்போது 54 சித்தா கொரோனா சிகிச்சை மையங்கள் உள்ளன என்று தெரிவித்தார். அதை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் அவர்கள் ஓமந்தூர் மருத்துவமனை தலைமை செயலகமாக மாற்றப்படுகிறது என்று குற்றச்சாட்டினை முன்வைத்த நிலையில், தேர்தல் அறிக்கையில் கூறியதன் அடிப்படையில் கிண்டியில் புதிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது என்று அமைச்சர் தெரிவித்தார்.