ஞாயிற்று கிழமை கடைகள் இயங்க தடை விதிப்பு – கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம்!
தமிழகத்தின் கோவை மாவட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் கொரோனா பரவும் விகிதம் அதிகரித்து வருவதால் நாளை (ஞாயிற்று கிழமை) பல்வேறு கட்டுப்பாடுகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவித்து உள்ளார். இதனால் கடைகள் இயங்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.
தீவிர கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் கொரோனா தாக்கம் முதல் மற்றும் இரண்டாம் அலை என தீவிரமாக பரவிய நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் ஓரளவுக்கு பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தமிழகத்தின் சில பகுதிகளில் நோய் தொற்று பரவும் விகிதம் படிப்படியாக அதிகரித்து வருவதன் காரணமாக 3ம் அலையின் தொடக்கமாக இருக்குமோ என மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. கோவை மாவட்டத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதன் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் விதிக்கப்பட்டுள்ளது.
கலையிழந்து வெறிச்சோடிய திருப்பதி ஏழுமலையான் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை!
அதன்படி நாளை (ஞாயிற்று கிழமை) பால், மருந்தகம், மளிகை கடைகள் மட்டும் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் ஓட்டல் மற்றும் பேக்கரிகளில், காலை, 8:00 முதல் இரவு, 10:00 மணி வரை பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. இறைச்சி கடைகள் செயல்பட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. எனவே மார்க்கெட்டுகளில் இன்று மக்களை தினம் கூடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இதுவரை 83% மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டதாக தரவுகள் கூறுகின்றன.
செப்டம்பரில் இன்னும் 5 நாட்களுக்கு வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
வணிக வளாகங்கள், துணிக்கடைகள், இதர நிறுவன பணியாளர்கள் கொரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தி இருப்பதை கண்காணிக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கேரள எல்லையில் உள்ள மாவட்டங்களில் கொரோனா பரவ அதிக வாய்ப்பு இருப்பதால் 24 மணி நேரமும் அதிகாரிகள் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளதாகவும் கோவை மாவட்ட கலெக்டர் சமீரன் கூறியுள்ளார்.