கலையிழந்து வெறிச்சோடிய திருப்பதி ஏழுமலையான் கோவில் – புரட்டாசி முதல் சனிக்கிழமை!
திருப்பதியில் கொரோனா பரவல் காரணமாக தொடர்ந்து 2வது ஆண்டாக புரட்டாசி சனிக்கிழமையில் பக்தர்கள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
புரட்டாசி சனி:
திருப்பதி ஏழுமலையான் திருக்கோயிலில் கடந்த ஆண்டு பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது. அதன் பிறகு கொரோனா ஓரளவு குறைந்து வந்த நிலையில் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக முன்பதிவு அடிப்படையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் வருகைக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி மாதந்தோறும் ரூபாய் 300 விரைவு தரிசன டிக்கெட்டுகள் தேவஸ்தானம் இணையதளம் மூலம் வெளியிடப்பட்டு வருகிறது. முன்பதிவு அடிப்படையில் இரவு 8 மணி வரை மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றது.
செப்டம்பரில் இன்னும் 5 நாட்களுக்கு வங்கி விடுமுறை – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
தினமும் சுமார் 20 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது. மேலும் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளது. புரட்டாசி மாத சனிக்கிழமை மிக விசேஷ தினமாக கருதப்படுகிறது. புரட்டாசி சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த தினம் என்பதால் திருப்பதியில் ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
தமிழகத்தில் படித்து விட்டு காத்திருக்கும் இளைஞர்களுக்கு அரசு வேலைகள் – கோரிக்கை!
ஆனால் கடந்த வரும் கொரோனா அச்சத்தால் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதே போல இந்தாண்டும் கொரோனா இரண்டாம் அலை அச்சத்தால் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை ஆன இன்று திருப்பதி மலை வெறிச்சோடி காணப்படுகிறது. புரட்டாசி மாதத்தில் அதிகம் கூட்டம் இருப்பதால் சுவாமியை பார்க்க முடியாவிட்டாலும் கோவிலில் கோபுரத்தை தரிசனம் செய்யவாவது பக்தர்கள் வருகை புரிவர். நடப்பு ஆண்டு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் திருப்பதிக்கு செல்ல இயலாத நிலையில் பக்தர்கள் உள்ளனர்.