பீகாரில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் – பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

0
பீகாரில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் - பள்ளி, கல்லூரிகள் திறப்பு!
பீகாரில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் - பள்ளி, கல்லூரிகள் திறப்பு!
பீகாரில் இன்று முதல் ஊரடங்கு தளர்வுகள் – பள்ளி, கல்லூரிகள் திறப்பு!

கொரோனா 2 ஆம் அலை காரணமாக கடந்த 2 மாதங்களாக விதிக்கப்பட்டிருந்த முழு ஊரடங்கில் இருந்து தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், பீகாரில் இன்று (ஜூலை 7) முதல் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மீண்டுமாக திறக்கப்பட்டுள்ளன.

ஊரடங்கு தளர்வுகள்

பீகார் மாநிலத்தில் கொரோனா நோய் பரவல் குறைந்து வரும் சூழலில் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்த முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் இன்று (ஜூலை 7) முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. முன்னதாக மாநிலம் முழுவதுமான கொரோனா நிலைமையை ஆய்வு செய்த பின்னர், கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது குறித்து உயர்மட்ட கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

தமிழ்நாடு மின்வாரிய காலிப்பணியிடங்களை நிரப்பும் திட்டம் – அதிகாரிகள் தகவல்!

அதன் படி மாநிலம் தழுவிய முழு ஊரடங்கு தளர்வுகளின் ஒரு பகுதியாக புதிய வழிகாட்டுதல்கள் நெறிமுறைகள் அமல்படுத்தப்பட்டு, அவை இன்று (ஜூலை 7) முதல் துவங்கி ஒரு மாதம் வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசின் புதிய வழிகாட்டுதல்கள்

  • 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டுமே பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்.
  • பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்டவை 50% வருகையுடன் செயல்படும்.
  • அடுத்த உத்தரவு வரும் வரை எந்தவொரு கல்வி நிறுவனங்களும் தேர்வுகளை நடத்த அனுமதிக்கப்படாது.
  • பயிற்சி நிறுவனங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்.
  • ஜிம்கள், கிளப்புகள் மற்றும் நீச்சல் குளங்கள் 50% திறனுடன் மீண்டும் திறக்கப்படும்.

TN Job “FB  Group” Join Now

  • மேலும் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மட்டுமே இவற்றுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
  • விளையாட்டு வளாகங்கள் அனைத்தும் விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்காக மட்டுமே அனுமதிக்கப்படும்.
  • உணவகங்கள் 50% திறனுடன் மீண்டும் செயல்படும்.
  • அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் வழக்கம் போல இயங்கலாம்.
  • ஆனால் தடுப்பூசி போடப்பட்ட ஊழியர்கள் மட்டுமே அலுவலகங்களுக்கு வர அனுமதிக்கப்படுவார்கள்.
  • அத்தியாவசிய பொருட்களின் கடைகளைத் தவிர, மற்ற கடைகள் இரவு 7 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்படும்.
  • இரவு 9 முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும்.
  • மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்ந்து மூடப்படும்.
  • திருமண விழாக்கள் அல்லது இறுதி சடங்குகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!