ஏப்ரல் 1 முதல் PF கணக்குகளில் புதிய மாற்றங்கள் – பயனர்கள் கவனத்திற்கு! மத்திய அரசு அறிவிப்பு!
மத்திய அரசின் புதிய அறிவிப்பு PF கணக்கு இரண்டாக பிரிகிறது. இந்த அறிவிப்பின் படி PF கணக்குகள் வரி விதிக்கு உட்பட்டவை மற்றும் வரி விதிக்கு உட்படாதவை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
முக்கிய அறிவிப்பு:
மாத ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு ஒரு மிக முக்கியமான செய்தி உள்ளது. ஊழியர் வருங்கால வைப்பு நிதியின் (EPF) விதிகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் PF திட்டத்தை பயன்படுத்தி அதிக வருமானம் பெறுபவர்கள் அதை வருங்கால வைப்பு நிதியில் ஒதுக்கி வைத்து அதிக லாபம் அடைந்து வருகின்றனர். இந்த போக்கை தடுப்பதற்கு மத்திய அரசு, EPFO-ல் ஒரு நபரின் பங்களிப்பு ஒரு நிதியாண்டில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால், அவர் இந்த நிதி ஆண்டு 2021-22 முதல் இரண்டு தனி PF கணக்குகளை பராமரிக்க வேண்டும் என கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வுடன் 14% அகவிலைப்படி (DA) தொகை – முழு விவரம் இதோ!
இந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 2021-2022 பட்ஜெட் அறிவிப்பில் EPFO-ல் ஒரு நபரின் பங்களிப்பு ஒரு ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கு மேல் இருந்தால் PF கணக்குகளுக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டது. அதன்படி அனைத்து PF கணக்குகளும் வரி விதிக்கு உட்பட்ட வை மற்றும் வரி விதிக்கு உட்படாத வை என இரண்டு பாகங்களாக பிரிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி, மார்ச் 31, 2021 வரை எந்தப் பங்களிப்பிற்கும் வரி செலுத்த வேண்டாம் . ஆனால் 2020-21 நிதியாண்டுக்குப் பிறகு PF கணக்குகளில் பெறப்படும் வட்டிக்கு வரி விதிக்கப்படும், இது தனித்தனியாக கணக்கிடப்படும்.
பிப்ரவரி 10 முதல் 1 – 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
இந்த விதிகள் ஏப்ரல் 1, 2022 முதல் நடைமுறைக்கு வரும். 2021-22 நிதியாண்டில், உங்கள் PF கணக்கில் ரூ.2.5 லட்சத்திற்கு மேல் டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அந்த கூடுதல் தொகைக்கு கிடைக்கும் வட்டிக்கு வரி செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. PF வரி விதிப்புக்கு என்று வருமான விதிகளில் 9டி என்ற பகுதி புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.