பிறந்த குழந்தைக்கும் இனி ஆதார் கார்டு – UIDAI புதிய திட்டம்!
தற்போது 18 வயது மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் சிறுவர்களுக்கு பால் ஆதார் கார்டு மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது பிறந்த குழந்தைகளுக்கு கூட ஆதார் கார்டு வழங்கும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
புதிய திட்டம்
இந்திய குடிமக்கள் அனைவருக்கும் ஆதார் கார்டு என்பது முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும். இதனை UIDAI எனப்படும் ஆதார் ஆணையம் விநியோகித்து வருகிறது. தற்போது வங்கி சேவைகளில் அனைத்து விதமான ஆன்லைன் பரிவர்த்தனைக்கும் ஆதார் கார்டு தேவைப்படுகிறது. அதாவது வங்கி கணக்கு தொடங்குவதில் கூட தற்போது ஆதார் கார்டு தான் முக்கியமாக உள்ளது. மேலும் தங்களின் வங்கி கணக்கில் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனால் ஆதார் கார்டில் அனைத்து விவரங்களும் சரியாக இருக்க வேண்டும்.
தமிழகத்தில் ஜனவரி 3 முதல் பள்ளிகள் திறப்பிற்கான வழிகாட்டுதல்கள் – அமைச்சர் விளக்கம்!
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஆதார் கார்டு மற்றும் சிறுவர்களுக்கு ‘பால் ஆதார் கார்டு’ வழங்கப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தற்போது புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ஆதார் கார்டு வழங்க ஆதார் ஆணையம் திட்டமிட்டுள்ளது. இதுவரை வயது வந்தவர்களில் 99.7% பேருக்கு ஆதார் கார்டு UIDAI வழங்கியுள்ளது. அதாவது 131 கோடி பேருக்கு வழங்கியுள்ளது. மேலும் ஆண்டுதோறும் 2 கோடி முதல் 2.5 கோடி குழந்தைகள் வரை பிறக்கின்றன. அதனால் இவர்களையும் ஆதார் கார்டுடன் இணைப்பதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பொதுமக்கள் அடுத்த 10 நாட்களுக்கு சிரிக்க, மது அருந்த தடை – அதிரடி உத்தரவு பிறப்பிப்பு!
அதில் குறிப்பாக புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு ஆதார் கார்டை அந்த மருத்துவமனையிலேயே வழங்க திட்டமிட்டுள்ளது. அத்துடன் குழந்தையின் படமும் சேர்க்கப்படும். இந்தியாவில் 140 கோடி வங்கிக் கணக்குகளில் 120 கோடி கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டதாகவும் தற்போது புதிதாக பிறந்த குழந்தைகளையும் ஆதார் கார்டுடன் இணைபத்தற்கு புதிய திட்டத்தை அறிமுகபடுத்தியுள்ளது என ஆதார் ஆணையத்தின் தலைமை அதிகாரி சவுரப் கார்க் அவர்கள் தெரிவித்துள்ளார்