வரி செலுத்துவோர் கவனத்திற்கு – வருமான வரித் துறைக்கான புதிய செயலி அறிமுகம்!
இந்தியாவில் வருமான வரித் துறை சார்பில் புதிதாக மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து முழு விவரங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்
வருமான வரித் துறை செயலி
தற்போது இந்தியா முழுவதும் டிஜிட்டல் மயமாகி வரும் நிலையில் அனைத்து வேலைகளும் மொபைல் செயலிக்குள் அடங்கிவிட்டது. இந்நிலையில் இந்தியாவில் வருமான வரித் துறை சார்பில் மொபைல் செயலி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் வருடாந்திர தகவல் அறிக்கையில் வரி செலுத்துவோர் தங்களது தகவலை சரிபார்த்து கொள்ளலாம்.
தமிழகத்தில் நாளை (மார்ச் 24) முதல் ரமலான் நோன்பு தொடக்கம் – அரசின் தலைமை காஜி அறிவிப்பு!
மேலும் இந்த செயலியின் பெயர் AIS for Taxpayer’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. கொடுக்கப்பட்ட நிதியாண்டிற்கான உங்கள் நிதி பரிவர்த்தனைகள் அனைத்தும் இந்த செயலியில் பட்டியலிடப்பட்டுள்ளன. இந்த செயலி AIS/TIS இன் விரிவான பார்வையை வரி செலுத்துவோருக்கு வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது என மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
Exams Daily Mobile App Download