இந்தியாவில் புதிய ஊரடங்கு தளர்வுகள் – சர்வதேச பயணிகளுக்கு சூப்பர் அறிவிப்பு!
இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் குறைந்து வருகிறது. அதனால் கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. இதனை தொடர்ந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு அமலில் இருந்த கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை கொண்டுவந்துள்ளது.
பயணிகளுக்கான தளர்வுகள்
இந்தியாவில் கொரோனா பரவலின் 2ம் அலையின் தாக்கம் குறைய தொடங்கியது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் உருவான ஓமைக்ரான் தொற்று பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவில் முதன் முதலாக கர்நாடக மாநிலத்தில் ஓமைக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஒடிசா, மணிப்பூர், உத்திர பிரதேசம், ஹரியானா ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொற்று வேகமாக பரவ தொடங்கியது. அதன்படி இந்தியாவில் கொரோனா பரவலின் 3ம் அலையின் தாக்கம் தொடங்கியதை உணர முடிந்தது.
1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
அதனால் தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவைப்பட்டால் ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி கொள்ளலாம் என்று மத்திய அரசு பரிந்துரைத்தது. அதன்படி பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு அறிவித்து வந்தது. அத்துடன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சில கட்டுப்பாடுகளையும் அரசு அமல்படுத்தியது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பரவல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. அதனால் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளில் சில தளர்வுகளை மாநில அரசு அறிவித்து வருகிறது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!
இதில் குறிப்பாக இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் தொற்று குறைந்துள்ள மாநிலங்களில் நீக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது மற்ற நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளுக்கு சில தளர்வுகளையும் மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில் கூறியதாவது, வெளிநாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தியவர்கள் 7 நாள் கட்டாய தனிமையில் இருப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. அத்துடன் விமான நிலையங்களில் சர்வதேச பயணிகளுக்கு மேற்கொள்ளப்படும் RTPCR பரிசோதனை கட்டாயமில்லை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.