1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்.13 வரை விடுமுறை – மாநில அரசு அறிவிப்பு!
மேகாலயா மாநிலத்தில் 6 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு 1 முதல் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பிப்ரவரி 14 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கிய நாள் முதல் தொடர்ந்து பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் பரவிய ஓமிக்ரான் தொற்று பரவல் காரணமாக மீண்டும் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களின் கல்வி நிலை கேள்வி குறியாக உள்ளது. நேரடி வகுப்புகள் நடைபெற்று வருவதால் நடப்பு கல்வியாண்டில் 10,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வுகளை நடத்தலாம் என்று பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. தற்போது தேர்வை நடத்துவதில் சிக்கல் எழுந்துள்ளது.
PF பென்ஷன் தொகை அதிகரிப்பு? ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ்!
இந்த நிலையில் மத்திய, மாநில அரசுகளின் முயற்சியால் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்ததது. தினசரி பாதிப்பு விகிதம் குறைந்து வந்த நிலையில் மாநில அரசுகள் இரவு மற்றும் வார இறுதி ஊரடங்கை ரத்து செய்தது. அதன் தொடர்ச்சியாக பள்ளிகளை திறக்கவும் அனுமதி வழங்கியது. இதனையடுத்து அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தற்போது மேகாலயாவில் கடந்த வாரம் முதல் கட்டமாக 6 – 12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது.
விஜய் டிவி ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் DNA டெஸ்ட் எடுக்கும் பாரதி? வில்லி வெண்பா சொன்ன அப்டேட்!
அதன் தொடர்ச்சியாக தற்போது 1 – 5 வரையிலான வகுப்புகளுக்கு பிப்ரவரி 14ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பிப்ரவரி 13ம் தேதியுடன் மாணவர்களுக்கு விடுமுறை முடியவுள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் நேரடி வகுப்புகள் முழுமையாக செயல்படும். அம்மாநில பார்கள் மற்றும் உணவகங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மேலும் அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு நாளை முதல் விலக்கி கொள்ளப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.