தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட் சேர்ப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

2
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட் சேர்ப்பு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட் சேர்ப்பு - கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர் காலிபணியிடங்களுக்கு ஆட் சேர்ப்பு – கல்வித்துறை அமைச்சர் அறிவிப்பு!

கடந்த 2 ஆண்டு கால இடைவேளைக்கு பிறகு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி முறையில் செயல்பட்டு வரும் நிலையில் அரசு பள்ளி மாணவர்கள் சேர்ப்பு விகிதம் எதிர்பாராத விதமாக எகிறியுள்ளது. அதே சமயம் ஆசிரியர் பணியிடமும் அதிகளவு இருப்பதால் அதனை நிரப்பும் பணியை குறித்து கல்வித்துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஆசிரியர் பணியிடம்:

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதனால் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப ஆசிரியர்கள் தேவைப்படுவதால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மேலும் கடந்த 2019ம் ஆண்டு முதல் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படாமல் உள்ளதால் அரசு பள்ளிகளில் சுமார் 13000க்கும் மேற்பட்ட ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

வங்கி வாடிக்கையாளர்கள் ‘இதனை’ ஆக.31 க்குள் செய்யாவிடில் கணக்கு முடக்கம்? முக்கிய தகவல்!

அத்துடன் வரப்போகிற (TNTET) தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மூலமாக முதற்கட்டமாக 9494 ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதால் அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்பட்டு நிரப்புவதாக மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

அதாவது, ஆறு மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெற்றது. இதில் கல்வித்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், மாநிலம் முழுவதும் 2 ஆயிரத்து 500 பள்ளிகள் அடையாளம் காணப்பட்டு, அவற்றுக்கு புதிய கட்டிடங்கள் கட்டும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும், ஆசிரியர் நியமனங்களுக்கான பணிகள் மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

  1. ஆசிரியர்கள் பற்றாக்குறை இருக்கும் போது எதுக்கு தன்‌விருப்ப ஓய்வு குடுக்குறீங்க. அதை ரத்து செய்ய வேண்டும்.

  2. மதுரையில் மாங்குளம் என்ற ஊரில் உயர்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக இருந்த என்னை பென்சன்தாரர்கள் காலி செய்யப் படுகிறார்கள் என்று இடைநிலை ஆசிரியரை மட்டும் சாதிமத பாகுபாடு பார்த்து தன்விருப்ப ஓய்வு அளித்துள்ளனர். ஏற்கனவே இரண்டு டிரான்ஸ்பர் எங்க அனுப்பிருக்காங்க.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!