தமிழகத்தில் வேகமெடுக்கும் ஓமிக்ரான் – மாவட்ட ஆட்சியர்களுக்கு பறந்த உத்தரவு! அரசு சுற்றறிக்கை!
தற்போது தமிழ்நாட்டிலும் ஓமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை ராதாகிருஷ்ணன் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
தடுப்பூசி பணி தீவிரம்
தமிழகத்தில் ஓமைக்ரான் தொற்று கண்டறியபட்டதை தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் ஒமைக்ரான் தொற்று எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 4 மாவட்டங்களில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 27 பேருக்கும், மதுரையில் 4 பேருக்கும், திருவண்ணாமலையில் 2 பேருக்கும், சேலத்தில் ஒருவருக்கும் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் ஓமைக்ரான் பரவல் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் & ஓய்வூதியதாரர்களுக்கு குட் நியூஸ் – உயர்த்தப்பட்ட DA அமல்!
அதனால் பொதுமக்கள் அனைவரும் கட்டாயமான முறையில் பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறையின் முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர்கள், மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அத்துடன் மக்கள் அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் விரைவில் முழு ஊரடங்கு? ஓமைக்ரான் எதிரொலி! மத்திய அமைச்சகம் தகவல்!
மேலும் அந்த சுற்றறிக்கையில் பொது மக்கள் அநேக இடங்களில் முகக்கவசம் அணியாமல் உள்ளனர். அத்துடன் தனிநபர் இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கோவிட் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடிப்பது போன்ற விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள். இதனை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்காணிக்க வேண்டும். அத்துடன் விதி மீறல் செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ஓமைக்ரான் காரணமாக பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.