தமிழகத்தின் 3 மாவட்டங்களில் புதிய வேளாண் கல்லூரிகள் – அமைச்சர் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் வேளாண் துறை சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது. அதன்படி 3 மாவட்டங்களில் புதிய வேளாண்மை கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கல்லூரிகள்:
தமிழகத்தில் வேளாண்மை கல்லூரிகள் விவசாயம் தொடர்பான படிப்புகளை மாணவர்களுக்கு கற்று தருகிறது. விவசாயம் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மண்ணின் தரம், தாவரங்களை தாக்கும் நோய் பற்றிய ஆய்வு போன்றவற்றை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா தாக்கத்தின் காரணமாக 12ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான துறைகளில் தேர்ந்தெடுத்து விண்ணப்பித்து வருகின்றனர்.
டிஜிட்டல் கடன் தளங்களை நம்பி ஏமாற வேண்டாம் – ரிசர்வ் வங்கி எச்சரிக்கை!
கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஆர்வம் காட்டி வரும் நிலையில் வேளாண்மை கல்லூரிகளில் ஆர்வமுடன் சேந்தது வருவது குறிப்பிடத்தக்கது. தமிழக சட்டமன்ற கூட்டத் தொடரில் இன்று கால்நடை, வேளாண் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளின் மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் ‘விவசாயிகளுடன் ஒரு நாள்’ என்ற திட்டம் ஒன்றை முதல்வரின் அனுமதியுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி, கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் (கீழ்வேளூர்), சிவகங்கை (செட்டிநாடு) ஆகிய மூன்று மாவட்டங்களில் ரூ.30 கோடி மதிப்பில் அரசு வேளாண்மைக கல்லூரிகள் தொடங்கப்படும். தற்போது, வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சியின் தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, வேளாண் நிதிநிலை அறிக்கையில் கிருஷ்ணகிரியில் புதியதாக அரசு தோட்டக்கலை கல்லூரி தொடங்க அறிவிக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
வேளாண் கல்வியின் முக்கியத்துவம் கருதி 2021-2022 ஆம் ஆண்டில், கரூர் மாவட்டம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் கீழ்வேளூா், சிவகங்கை மாவட்டத்தில் செட்டிநாடு ஆகிய இடங்களில் மூன்று புதிய அரசு வேளாண்மை கல்லூரிகள் தொடங்குவதற்கு மாநில அரசு தலா ரூ.10 கோடி வீதம் மொத்தம் ரூ.30 கோடி நிதியை ஒதுக்கும் என வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.