விஜய் டிவி ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் புதுவரவு – இனி முல்லை கதாபாத்திரத்தில் இவரா? ப்ரோமோ ரிலீஸ்!
முல்லைக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என ரசிகர்கள் காத்து கொண்டிருக்கும் வேளையில், முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா சீரியலை விட்டு விலகவுள்ளார். இவருக்கு பதிலாக சுந்தரி நீயும் சுந்தரன் நானும் சீரியலில் நடித்து வந்த தேஜஸ்வினி கவுடா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
விஜய் தொலைக்காட்சியில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது தான் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு நாளும் புது புது திருப்பங்களுடன் ஓடி கொண்டிருப்பதால் மக்கள் பலரும் விரும்பி பார்த்து வருகின்றனர். கூட்டு குடும்பத்தில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளை இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தத்ரூபமாக மக்களுக்கு காட்டி வருகிறது. இந்த குடும்பத்திற்கு மட்டும் ஒவ்வொரு நாளும் அடுக்கடுக்காய் பல பிரச்சனைகள் வந்தபடியே உள்ளன.
விஜய் டிவி ‘பிக் பாஸ்’ வீட்டில் ரம்யா பாண்டியன் களமிறங்கியது ஏன்? ரசிகர்கள் ஷாக் ஆக்கிய தகவல்கள்!
பல நாட்களாக கண்ணனின் காதலை பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தொடர்ந்து பிரச்னை செய்து வந்தனர். அதற்கு பிறகு ஒருவழியாக கண்ணனின் காதலை குடும்பத்தினர் அனைவருமே ஏற்றுக்கொண்டனர். இதன் பிறகு முல்லைக்கு குழந்தை பெரும் சக்தி இல்லை என்பதை கதிரிடம் மருத்துவர் கூறிவிடுகிறார். ஆனால் இந்த விஷயம் முல்லைக்கு தெரிந்துவிட்டால் முல்லையால் தாங்கிக்கொள்ள முடியாது என கதிர் உண்மையை யாரிடமும் கூறாமல் மறைத்து விடுகிறார்.
இந்நிலையில் முல்லை கர்ப்பமாவது போல தகவல் வெளியாகியுள்ளது. இப்படி அடுக்கடுக்காய் பிரச்சனைகள் சென்று கொண்டிருக்கும் வேளையில் பட வாய்ப்பின் காரணமாக முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த காவ்யா சீரியலை விட்டு விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவ்யாவிற்கு பதிலாக ”சுந்தரி நீயும் சுந்தரன் நானும்” சீரியலில் நடித்து வந்த தேஜஸ்வினி கவுடா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவ்யா சீரியலை விட்டு விலகுவதால் ரசிகர்கள் மன வருத்தத்தில் உள்ளனர்.