கலர்ஸ் தமிழ் ‘அபி டெய்லர்’ சீரியலில் களமிறங்கும் புதிய பிரபலம் – உற்சாகத்தில் ரசிகர்கள்!
விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வந்த பிரபல தொகுப்பாளர் பப்பு தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் அபி டெய்லர் என்ற சீரியலில் புதிதாக களம் இறங்குகிறார். இதனால் இவரது ரசிகர்கள் சீரியலில் இவரது கதாபாத்திரம் குறித்து மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
புதிய பிரபலம்:
சமீபத்தில் சின்னத்திரை திருமண கொண்டாட்டங்களில் பேசப்பட்ட ஒரு சூப்பர் ஜோடியான ஜீ தமிழ் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் சேர்ந்து தற்போது கலர்ஸ் தமிழில் அபி டெய்லர் என்ற புதிய சீரியலில் நடித்து வருகின்றனர். இவர்களது ஜோடி ஒன்றாக சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் ஆர்வம் இந்த சீரியல் மூலம் பூர்த்தி அடைந்தது. முதலில் ரேஷ்மா கதாநாயகியாக அறிமுகம் ஆன ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற தொடரில் தான் ரேஷ்மா மற்றும் மதன் இருவரும் காதலிக்க தொடங்கினார்கள். இந்த விவரம் சீரியல் முடிய இருக்கும் தருவாயில் தான் சமூக ஊடகங்களுக்கு அறிவிக்கப்பட்டது
இவர்களின் புகழினால் அபி டெய்லர் சீரியல் அதிக ரேட்டிங்கை பெறும் என்று பலத்த எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் அந்த அளவிற்கு மக்களிடம் ரீச் ஆகவில்லை. இதனால் இந்த சீரியல் நிர்வாகத்தினர் சீரியலில் புதுப்புது கதாப்பாத்திரங்களாக பிரபலமான நடிகர்களை களம் இறக்கி வருகின்றனர். சமீபத்தில் அபி டெய்லர் சீரியலில் நடிகர் ஜெய் ஆகாஷ் மற்றும் நடிகை சாந்தினி இருவரும் வந்தனர். தற்போது அந்த வரிசையில் புதிதாக நடிகர் மற்றும் தொகுப்பாளர் பப்பு அறிமுகம் ஆக உள்ளார்.
விவாகரத்திற்கு பின் மீண்டும் சந்தித்து கொண்ட சமந்தா & நாக சைதன்யா – இதுதான் விஷயமா?
சிறு வயது முதல் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த பப்புவின் துறுதுறுப்பை பார்த்து விட்டு இயக்குனர் பாலச்சந்தர் தான் இந்த பெயரை வைத்தார். பல குறும்படங்களிலும் மற்றும் சிவா மனசுல சக்தி, சின்னத்தம்பி மற்றும் கலர்ஸ் தமிழ் சேனலில் ஒளிபரப்பான இதயத்தை திருடாதே போன்ற சீரியல்களிலும் பப்பு நடித்துள்ளார். மேலும், பல நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்து தனது தனித்திறமையின் மூலம் தற்போது அதிக பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் பப்பு அபி டெய்லர் சீரியலில் ஆட்டோ டிரைவராக புது வேடத்தில் நடிக்க உள்ளார். இந்த தகவலை அறிந்த பப்புவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர்.