IND vs ENG டெஸ்ட் தொடர் – அஷ்வினை ஓரங்கட்டிய கேப்டன் கோஹ்லி? நெட்டிசன்கள் விமர்சனம்!
இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான 4 ஆவது டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு வாய்ப்பு கிடைக்காமல் தனியாக பார்வையாளர்கள் இடத்தில் இருந்து விளையாட்டை கண்டு கொண்டிருக்கும் அஷ்வினுக்கு நெட்டிசன்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
டெஸ்ட் போட்டி
இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் 3 போட்டிகள் நிறைவுற்ற நிலையில், 4 ஆவது டெஸ்ட் போட்டிகள் லண்டன் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்காக இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்ட சுழற்பந்து வீச்சாளர் அஷ்வினுக்கு இதுவரை ஒரு வாய்ப்பு கூட வழங்கப்படவில்லை.
தமிழகத்தில் பள்ளி மாணவ, மாணவியருக்கு கொரோனா தொற்று – பெற்றோர்கள் அதிர்ச்சி!
இதில் 4 ஆட்டங்களில் ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்த கேப்டன் கோலி, அஷ்வினை ஓரங்கட்டியது குறித்து நெட்டிசன்கள் தற்போது விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். உலக டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 2 இடத்தை வகித்திருக்கும் அஷ்வின், தற்போது போட்டி நடைபெற்று வரும் ஓவல் மைதானத்தில் சோமர்செட் அணிக்காக விளையாடி 27 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார். சுழற்பந்து வீச்சு எடுக்காத இந்த ஆடுகளத்தில் 6 விக்கெட்டுகள் வீழ்த்திய அஷ்வினுக்கு டெஸ்ட் தொடரில் வாய்ப்புகள் மறுக்கப்பட்டது தற்போது கேள்விக்குறியாக மாறியுள்ளது.
இதுவரை நடைபெற்ற 4 டெஸ்ட் போட்டிகளிலும் 4 வேகப்பந்து வீச்சாளர்கள், ஒரு சுழற்பந்து வீச்சாளர் என்ற கூட்டணியை தக்கவைத்துள்ள கோலி, அடுத்த ஆட்டத்தில் அஷ்வினுக்கு வாய்ப்பு கொடுப்பது சந்தேகமாக உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த டெஸ்ட் தொடரின் போது அஷ்வினின் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கின் அபார திறமை அனைவராலும் ஈர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரிலும் 32 விக்கெட்டுகளை அஷ்வின் எடுத்திருந்தார்.
டெஸ்ட் தொடருக்கான எல்லா தகுதிகளும் உடைய அஷ்வினுக்கு, இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வாய்ப்புகள் வழங்காதது குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதாவது ஓவலில் நடைபெற்று வரும் 4 ஆவது டெஸ்ட் போட்டியை பார்வையாளர்கள் இருப்பிடத்தில் அமர்ந்து கண்டுகளிக்கும் அஷ்வினின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக, அவருக்கு நெட்டிசன்கள் தங்களது ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர்.
IPL 2021 : RCB அணியுடன் இணைய அமீரகத்திற்கு பறந்த ஏபி டிவில்லியர்ஸ்! ரசிகர்கள் உற்சாகம்!
இது தொடர்பாக வலைதளங்களில் வெளியான சில கருத்துக்கள், ‘அஷ்வின் போன்றதொரு மனிதனை இந்திய கிரிக்கெட் அணி தவறவிட்டு விட்டது. ஒருவரது ஈகோவால் இது போன்றதொரு செயல்பாடுகள் நடைபெறுவது தவறான செயல். எதிர்காலத்தில் இந்திய அணிக்கு தகுதியான கேப்டனை ஏற்படுத்த வேண்டும். ஓவல் ஆடுகளத்தில் நாம் அஷ்வினை இழந்துள்ளோம். BCCI இப்படி அகங்காரம் பிடித்த கேப்டனை மற்ற வீரரது வாழ்க்கையில் விளையாட அனுமதிக்க கூடாது’ என கூறுகிறது.