மணிப்பூரில் நிறுத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு.. தமிழக மாணவர்களுக்கு வந்த சிக்கல் – வெளியான அப்டேட்!
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையேயான கலவரம் காரணமாக அந்த மாநிலத்தில் மட்டும் நீட் தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வு
நாடு முழுவதும் மருத்துவப்படிப்புகளுக்கான நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மணிப்பூர் மாநிலத்தில் இரு இனங்களுக்கு இடையே கலவரம் நடந்து வருகிறது. அதனால் நீட் தேர்வு நடத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்படுமா என தேர்வர்கள் குழப்பத்தில் இருக்கின்றனர், மேலும் மணிப்பூரில் நீட் தேர்வு நடத்தப்பட்ட பின் தான் ரிசல்ட் வெளியாகும். அதற்கு பிறகு, எப்போது நீட் தேர்வு ஆல் இந்தியா ரேங்க் வெளியிடப்படும் என தேர்வர்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.
வக்பு வாரியத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் – விண்ணப்பிக்க மே 31 கடைசி நாள்!
மேலும் தமிழகத்தில் பொறியியல் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில், அவர்களுக்கு மருத்துவ சீட் கிடைத்தால் பொறியியல் படிப்பை விட்டு விடுவார்கள். அதனால் பொறியியல், அக்ரி, போன்ற படிப்புகளில் இடங்கள் காலியாக இருப்பதால் அந்த இடம் தேவைப்படும் மாணவர்களுக்கு கிடைக்காமல் போகிறது. அதனால் இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என கல்வியாளர் கரியர் கன்சல்டண்ட் & அனலிஸ்ட் ஜெயப்பிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார்.