மருத்துவ மேற்படிப்பிற்கான ‘நீட்’ தேர்வு விண்ணப்பம் – மார்ச் 15ம் தேதி இறுதி நாள்!!
நீட் தேர்வு:
நீட் என்பது தேசிய தகுதி மற்றும் நுழைவு சோதனை. இந்தியாவில் இளங்கலை மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு நீட் தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, தனியார், பல் மருத்துவ கல்லூரிகள், எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகளிலும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளுக்கு இந்த நீட் தேர்வின் மதிப்பெண் மூலம் சேர்க்கை நடைபெறும். கடந்த 2020ம் ஆண்டு 16 லட்சம் பேர் நீட் தேர்விற்கு பதிவு செய்திருந்தனர்.
தமிழகத்தில் திறக்கப்படாத நடுநிலை பள்ளிகள் – PTA இணைப்பு கட்டணம் செலுத்த உத்தரவு!!
இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்புகளுக்கு மொத்தம் 30,000க்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளது. இதில் தமிழகத்தில் மொத்தம் 4,000 இடங்கள் உள்ளது. மேற்படிப்புக்கான தேர்வு எழுதுபவர்களை கொண்டு இந்த இடங்கள் நிரப்பப்படுகிறது. நடப்பு ஆண்டில் மேற்படிப்புக்கான நீட் தேர்வு ஏப்ரல் 18ம் தேதி அன்று மதியம் 2 மணி முதல் மாலை 5:30வரை ஆன்லைன் முறையில் நடைபெறும்.
விண்ணப்பம்:
இந்தியா முழுவதும் மொத்தம் 225 நகரங்களில் தேர்வு நடக்கிறது. தேர்வுக்கான விண்ணப்பங்களை பிப்ரவரி 23ம் தேதி முதல் மார்ச் 15ம் தேதி இரவு 11:55 மணி வரை https://nbe.edu.in/, https://www.natboard.edu.in/ என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஏப்ரல் 12ம் தேதி இணையத்தில் வெளியிடப்படும். தேர்வின் முடிவுகள் மே 31ம் தேதி அன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்