நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடிக்கு விரைவில் திருமணம்? திருப்பதி கோவிலில் சாமி தரிசனம்!
தமிழ் திரைப்பட இயக்குனர், நடிகர், திரைப்பட பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டவர் விக்னேஷ் சிவன். அவர் தனது தமிழ் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அது குறித்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா:
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை நயன்தாரா. அவர் திரைப்பட இயக்குனர், நடிகர், பாடலாசியர் என பல பரிமாணங்களில் திறமை கொண்ட விக்னேஷ் சிவன் பல ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக பேட்டி ஒன்றில் நயன்தாரா தெரிவித்துள்ளார். அது மட்டுமில்லாமல் அவர் திருமணத்திற்கு பின் நடிக்க போவதில்லை எனவும், குடும்பத்தை மட்டுமே பார்க்க போவதாகவும், சில படங்கள் தயாரிக்கும் திட்டம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வருண் பற்றிய உண்மையை தெரிந்து கொள்ளும் மல்லிகா? அத்தை போடும் திட்டம் – வெளியான ப்ரோமோ!
மேலும் இந்த காதல் ஜோடி விரைவில் கணவன், மனைவியாக பார்க்க ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள். இந்த நிலையில் திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரபல நடிகை நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவனுடன் சுவாமி தரிசனம் செய்து கொண்டார். இன்று காலை விஐபி தரிசனம் மூலமாக சுவாமி தரிசனத்துக்கு அவர்கள் சென்றனர். சுவாமி தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் தீர்த்தம் மற்றும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
நிஜ அப்பாவுடன் புகைப்படத்தை வெளியிட்ட “பாண்டியன் ஸ்டோர்ஸ்” கண்ணன் – குவியும் வாழ்த்துக்கள்!
அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதன் பின் கோவிலுக்கு வெளியே வந்த அவர்கள் ரசிகர்கள் அவர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டனர். நடிகை நயன்தாரா தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ’காத்து வாக்குல ரெண்டு காதல்’, ரஜினியின் ‘அண்ணாத்த’, ஷாருக்கானின் ‘லயன்’, அல்போன்ஸ் புத்திரனின் ‘கோல்ட்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.